வண்ணத்துப்பூச்சி

நான் ஆச்சரியப்படும்
ஆச்சரியங்கள் அவை!
நான் வியந்து நோக்கும்
விந்தைகள் அவை!

இறைவன் படைப்பில்
இத்தனை நிறங்களா!
கடவுள் வாரி இறைத்த
வர்ணக் கலவைகள்!


கவிஞர்களின் கருவூலங்கள்!
திரைப்பாடல்களின்
திரவியங்கள்!
அவற்றின் அழகை
கண்டு ரசியுங்கள்
கண்டு மட்டுமே ரசியுங்கள்!

எழுதியவர் : ரோகிணி (4-Jul-21, 1:01 pm)
சேர்த்தது : Rohini
பார்வை : 151

மேலே