மருமகளாய் வந்தபின்

மருமகளை பெற்றபின் மாமியாளுக்கு பெருமிதம்
மருமகளாய் வந்தபின் மணமகளுக்கு பெருமிதம்
உணவு சமைக்கும் இடத்தினிலே உண்டாகும்
கலந்துரையில் பூசல்கள் மொட்டு விடும்
புரிந்துகொண்ட போதிலுமே பலமாய் சண்டைவரும்
பொறுத்துக் கொள்ளா இருவருக்கும்
பூனை காசரையால் தேய்த்து போல் மனமும் எரியும்
முன்னுக்கு பின்னாய் முழு பொழுதும் வீம்பு வரும்
கொண்டவனும் கொண்டுவந்தவனும் தினமும்
சண்டையை விலக்கும் நிலை வரலாம்
அண்டை வீட்டார் வாய்களுக்கு அவுல் கிடைத்ததாய்
எண்ணிக் கொண்டு எந்நேரமும் மகிழ்ந்திடுவர்
மாமியாளுக்கு மருமகள் குலம் உயர்த்தும்
கோதையென்று பரிந்து கொண்டால் மகிழ்வே!
------ நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (8-Jul-21, 7:56 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 66

மேலே