403

15.7.2021

இன்று எம் பள்ளியில் கல்வியின் நாயகன் காமராசர் அவர்களின் 119’ம் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது..... கொரோனா தொற்றுக் காரணமாக வெகு அருகாமையில் உள்ள சில பெற்றோர்கள் மட்டுமே வருகை தந்திருந்தனர்...

காமராசர் அவர்களின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது....

கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் என்ற உறுதியுடன்
பெற்றோர் இல்லாத புதிதாய் இந்த ஆண்டு சேர்ந்த குழந்தைக்கு, ஆசிரியர்கள் சார்பில் உதவித்தொகை வழங்கப்பட்டது... காமராசரின் வாழ்வில் நடந்த ஒருசில சம்பவங்கள் பற்றிய சிறு உரையாடலுக்குப்பின் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது...

எல்லாவற்றிர்க்கும் மேலாக எனக்கு பெரும் மகிழ்ச்சியும் பெருமிதமும் தந்த நிகழ்வு, எங்கள் பள்ளியில் படித்த ஐந்து மாணவர்கள்
1.ரஷீத் 2.மெஹபூப் பாஷா 3.முகமது மன்சூர் 4.சத்தீஷ் 5.ரவி
தங்கள் பிள்ளைகளை எங்கள் பள்ளியில் வந்து சேர்த்துள்ளார்கள் என்பதே... அதில் இருவர் இன்று விழாவிலும் குடும்பத்துடன் வந்து கலந்துக் கொண்டது மாபெரும் ஆத்ம திருப்தியை தந்தது...!

எழுதியவர் : வை.அமுதா (17-Jul-21, 10:22 pm)
பார்வை : 31

மேலே