இரு விழிகள் விழ
ஆ ராரே ராரி ரோ
ஆ ராரே ராரி ரோ...
தா ராரே தந் தார ரேர
தா ராரே தந் தார ரேர...
கடக்கிற காதல் கண்டே
வாழுறன்
நடக்கிற வாழ்வ வாழாம
எதிர்கால வாழ்வில் இருக்கிறே
நிகழ்கால வாழ்வ நெனைக்காம
கடந்தகால வாழ்வ மறக்காம...
ஆ ராரே ஆ ராரே...
தா ராரே தா ராரே...
ஒவ்வொரு எழுத்தும்
ராகமானதே
இசையில் நனைந்தும்
பாடலானதே..
பார்க்கிறேன்
இரு விழிகள் விழ...
சிரிக்கிறேன்
இரு இதழ்கள் பட...
மறைக்கிறாய் மௌனத்தில்...
பதிக்கிறாய் நெஞ்சத்தில்...
திரள் மேகங்கள்
திரண்டு வந்ததே
பகல் பொழுதுகள்
இருண்டு போனதே...
காதல் நெஞ்சம்
பிரிந்தலாகும் போதே
மூச்சு சிற்றரையில்
உட்சுவாசம் உள்ளிளுக்குதே...
வருவாளொ அவளும்
இதழ்மேல் இதழ் வைத்து
வெளிசுவாசம் கொடுத்து
என்னை பிழைக்க வைக்கதானே..
இதயவால்வை மூடாமல்
திறந்து வைத்தே இருந்தேனே...
உன்னை என்னிதய
அறையில் அடைத்து வைத்து வாழத்தானே...