இயற்கைவானின் எழில்

விண்ணில் மிதக்கும் விண்மீன்கள்
கண்ணிற்கு விந்தைதரும் காட்சி ஓடும்
மேகங்கள் சிதறி ஓடுகையில் ஏதேதோ
மண்ணில் கானில் திரியும் யானைபோல்
சிங்கமும் புலியும் போல் அமையும் காட்சி
சூரியன் ஒளிபட்டு மழைமேகத்தின் இடையே
வந்து தெரியும் எழுநிற வானவில்
நீலா கடல்போல வானில் வெள்ளிப்படகாய்
நம் என்ன எழுச்சிகளுக்கு காரணமாய்
உலாவிவரும் வெண் நிலா என்று
நீளுகிறது வானின் இயற்கை எழில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jul-21, 8:34 am)
பார்வை : 196

மேலே