காதல்

நீ காட்டும் பாதையில் நான் நடக்கிறேன் காலம் வரை என்னுடன் நீ வருவாய் என நம்பி.
உன் கரங்களை பிடித்தே நடக்கிறேன் காலத்தின் எல்லை வரை.
உன் கை சேர்த்து நடக்கும் நிமிடம்
என் உடல் சோர்வு அற்று புத்துணர்ச்சி அடைகிறது புதிதாய் பிறந்தவன் போல் தோன்றும் என் என்ன கடலில் நான் கடல் நண்டு போல் மூழ்கி கிடைகிறேன்.
அலைகளாய் வந்து மோதும் உன் அன்பு குரலை கேட்டு மீன்கள் போல் துள்ளி எழுகிறேன்.
நத்தை ஓட்டில் நத்தை ஒட்டிக் கொண்டிருப்பது போலவே உன் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கும் என் மனதை கட்டி அணைப்பாயா என் அன்பு காதலி.

எழுதியவர் : மகேஸ்வரி (22-Jul-21, 7:11 pm)
Tanglish : kaadhal
பார்வை : 151

மேலே