முதியோர் காப்பகமும் குழந்தைகள் காப்பகமும்
முதியோர் காப்பகமும் குழந்தைகள் காப்பகமும்.
இப்போதெல்லாம் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை முதியோர் காப்பகத்தில் அவர்களது முதுமைக் காலத்தில் விட்டு விடுகிறார்கள் இல்லையா?
மற்றவர்கள் அனைவரும்,
"இக்காலப் பிள்ளைகளுக்குப் பாச உணர்வும் குடும்பப் பிணைப்பும் இல்லை",
என்று திட்டுகிறார்கள் அல்லவா?
அதே மாதிரி,
"இந்தக்காலப் பிள்ளைகளுக்குத் தமது நெருங்கிய உறவினரைக் கூட அடையாளம் தெரிவதில்லை!" என்று கரித்துக்கொட்டுகிறார்கள் இல்லையா?
இதற்கெல்லாம் என்ன காரணம்?
இதற்கெல்லாம் யார் காரணம்?
பெற்றோரின் அலட்சியமும் பொறுப்பின்மையும் தான் காரணம்!
பெற்றோர்தான் முழு முதற் காரணம்!
பிள்ளைகள் குழந்தைகளாக இருக்கும் போது அவர்களைப் பெற்றோர்,
தம்முடன் வீட்டில் வைத்து அன்புடன் அரவணைத்து,
நல்லது கெட்டது ஆகியவற்றை அடையாளம் காட்டி வளர்க்கிறார்களா?
குடும்ப விழாக்களிகும் திருமணங்களிலும் தம் பிள்ளைகளையும் பங்கேற்கச் செய்து,
அங்கு உறவினரை உறவின் முறைகளை, குடும்பப் பங்காளிகளை,
அடையாளம் காட்டிப் பழக்குகிறார்களா?
தாங்கள் வேலைக்குச் செல்ல வேண்டி இருப்பதால், தம் குழந்தைகளை,
குழந்தைகள் காப்பகத்தில் யாரோ ஒரு, கூலிக்கு மாரடிக்கும் ஆயாவின் பொறுப்பில் விட்டு விடுகிறார்கள் அல்லவா?
அப்புறம் அவர்களுக்கு இரண்டரை வயதானதும் குழந்தைகள் பள்ளியில் சேர்த்து விடுகிறார்கள் இல்லையா?
அப்புறம் அவர்களுக்குப் பத்து வயதானதும் அவர்களை உயர் கல்விப் பள்ளியில் ஹாஸ்டலில் சேர்த்து விடுகிறார்கள் இல்லையா?
படிப்பு முடிந்ததும் அவர்களை வெளியூருக்கு வேலைக்காக அனுப்பி விடுகிறார்கள் அல்லவா?
அங்கும் ஓட்டல் சாப்பாடு அல்லது சொந்தச் சமையல் என்று தனிமை வாழ்க்கை மட்டுமே குழந்தைகளுக்கு வாய்க்கிறது இல்லையா?
இத்தனை குறைகளைப் பெற்றோர் தம் பக்கத்தில் வைத்துக்கொண்டு,
பிள்ளைகளை வளர்க்கிறார்கள் இக்காலத்தில்!!
அப்புறம் எப்படி ஐயா நம் பிள்ளைகளுக்கு நம் மீது பாசம் வரும்?
குடும்பப் பண்பாடு எங்கிருந்து வரும்?
கூடி இருத்தல், கலந்து விளையாடுதல், தம்பி தங்கையருடன் செல்லச் சண்டைகள் இடுதல், பகிர்ந்து உண்ணுதல், அப்பாவின் வழிகாட்டல், அம்மாவின் பாசம் கொண்ட வீட்டு உணவு, தம்பி தங்கையரின் அன்பு இவையெல்லாம் எங்கிருந்தையா அவர்களுக்குக் கிடைக்கிறது?
இப்படி இருக்க முதியோருக்குப் பிள்ளைகள் தமக்குக் கிடைத்ததைத தானே
"பதில் மரியாதை" என்று திருப்பிச் செய்வார்கள்?
முதலில் "குழந்தைச் சிறைச்சாலைகள்" ஆகிய "குழந்தைகள் காப்பகங்கள்" அனைத்தையும் ஒழித்துக் கட்டுங்கள் ஐயா!
ஓழித்துக்கட்டி விட்டு,
பாசத்துடனும் கடமை உணர்வுடமும் பெற்றோர் பொறுப்புடனும் உங்கள் அன்பைப் பொழிந்து பிள்ளைகளை வளருங்கள்.
அப்படி வளர்த்தால்தான்,
நாளை நீங்கள் போய்ச் சேரத் தயாராக இருக்கும்
முதியோர் இல்லங்கள் ஒழியும்!!
----- செல்வப் ப்ரியா -- சந்திர மௌலீஸ்வரன் மகி.
01 ஆகஸ்ட் 2021 - ஞாயிற்றுக் கிழமை.