இராப்பசுவின் பால் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

பகற்பசும்பால் காய்ச்சிப் பருகி னழலும்
இகற்கபமும் ஈளையுமி ராவாம் - புகல்பித்த
வேகமும்போம் மேனியெல்லாம் மேனியிடுந் தாதுவுமாம்
போகமுமுண் டாகும் புகல் 1

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா

இரவின்பால் கண்ணில் எழுபிணிபோக் கும்பின்
பரவியநோ யும்போக்கும் பாரில் - விரகமுற்றார்க்
கத்தியம் பன்னவிழி ஆயிழையே யாவருக்கும்
பத்தியமாம் என்றைக்கும் பார் 2

- பதார்த்த குண சிந்தாமணி

பகலிற் சுரந்து இரவில் கறக்கின்ற பாலால் தேக அழற்சி, கபநோய், சுவாசம், பித்த நோய், கண்நோய், விந்து தொடர்பு நோய்கள் இவை நீங்கும்; உடல் பொலிவு, விந்துப் பெருக்கம், மாதர் மீது விருப்பம்
ஆகியவற்றை உண்டாக்கும்; பத்தியத்திற்கு உதவும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Aug-21, 8:05 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே