ஜெய் ஜவான் ஜெய் கிசான்

சொந்த நாட்டிற்காக,
சொந்த ஊரை விட்டு,
கட்டிய மனைவியை விட்டு,
பெற்ற குழந்தையை விட்டு - என்னை
பெற்றெடுத்த முதிர்க்குழந்தைகளையும் விட்டு,
சுட்டெரிக்கும் வெயிலிலும்,
உறையவைக்கும் குளிரிலும்,
உறக்கமதை நினைக்காமல்,
கண்ணிமைகள் மூடாமல்,
நான் காத்திருப்பேன்! - நீங்கள்
சுதந்திர காற்றை சுவாசிக்க!

ஆஹா என்ன ருசி!
நான் குடிக்குற கஞ்சி!
நல்ல சாப்பாடு சாப்பிட்டு,
நாலு நாளாச்சு;
பண்டிகைகள் கொண்டாடி,
பல மாசமாச்சு;
அடுத்த வேள சாப்பாடு,
உறுதி இல்லாம போச்சு,
கடன கிடன வாங்கி,
விதை நெல்ல வாங்கி,
அறுவடையும் முடிச்சாச்சு;
என்னோட இறுதிமூச்சு,
இருக்கிற வரைக்கும்,
என் கை சேத்துல இறங்கும்!
என்னோட வேண்டுதல் என்னனா,
சாப்பாடை மட்டும் வீணாக்காத மக்கா!

உடன் பிறவா சகோதர சகோதரிகளுக்கு,
எங்களோட சுதந்திர தின வாழ்த்துகள்!

எழுதியவர் : மா செந்தில் லோகு (13-Aug-21, 9:18 pm)
சேர்த்தது : செந்தில் லோகு
பார்வை : 557

மேலே