வலி

அழுத வடிந்த
கண்களுக்கு
புகைதான்
காரணமென்றாய்

அறைவிழுந்து
சிவந்தெழுந்த
உன் கன்னத்தை
நெருப்பா சுட்டது

உன் வலிகளை
புனைவாக்குவதில்
உனக்கு தான்
எத்தனை
சாமர்த்தியம்
அம்மா

எழுதியவர் : S. Ra (26-Aug-21, 10:50 am)
சேர்த்தது : Ravichandran
Tanglish : vali
பார்வை : 195

மேலே