சுளுக்கு நாயகம் பூண்டு - கலி விருத்தம்
கலி விருத்தம்
(மா கூவிளம் கூவிளம் கூவிளம்)
முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.
விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;
நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!
2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்
விளத்தின் இடத்தில் மாங்காய் வருவதும் உண்டு. (முதலிரண்டு
சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று
ஆசிரியத்தளை அமையும்; மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)
சுளுக்கு நாயகந் தோஷஞ் சுரமொடு
சுளுக்கும் வாங்குந் தொடுத்தகை கால்களின்
சுளுக்கு மேற்கற டுங்கரைக்குஞ் சொன்னோஞ்
சுளுக்கு மேல்வீ ழிரத்தந் துடைக்குமே
- பதார்த்த குண சிந்தாமணி
இது தோடம், சுரத்தால் உண்டான சுளுக்கு, உடற் சுளுக்கு, ரத்தத் தடிப்பு இவற்றைப் போக்கும்