உயிர்

"பாய்ந்து வரும் புலியின் வேகம்,
அதில் தெரியுது இரை கிடைக்கா
அதன் கோபம் ,

ஓடி ஒளியுது மான் ,
மறைவிடத்தின் ஒரு ஓரந்தான் ,

தேடி வருகுது புலி ,
மானுக்கோ அதைக் கண்டு கிலி,

ஓடி ஓடி தேடுது புலி ,
மறைய துடிக்குது மான் ,
முடிந்தால் உடனே
கரைந்து விடவும் தான் ,

சலித்து கால் வலித்து
தொய்ந்தது புலி ,
தப்பி பிழைத்தோம் என
மகிழ்ந்து பாய்ந்தது மான்,

துள்ளி குதித்து ஓடுது
அந்த மான் ,
உயிர் அனைத்துக்கும்
அற்புதம் என்று உணர்ந்துத்தான்."

எழுதியவர் : (16-Sep-21, 7:55 am)
சேர்த்தது : லக்க்ஷியா
Tanglish : uyir
பார்வை : 71

மேலே