விவசாயின் நிலை

விவசாயி ஒருவர் நில கடலைப்பருப்பு உடைப்பு மில்லுக்கு பருப்பு அடிக்க கொண்டு செல்கிறார்.
மில்லில் வேலை பார்ப்பவரிடம் 10 மூட்டை இருக்கிறது.
5 மூட்டை தண்ணி போட்டு மூக்கு உடையாமல் அடிக்கவும், மீதம் 5 மூட்டை தண்ணி போடாமல் அடிக்கவும் என்று கூறினார்.
அதை கேட்டுக்கொண்டு இருந்த பெண், அருகில் இருந்த கட்டையை எடுத்து விவசாயின் மூக்கை உடைத்து விட்டாள்.
என் புருஷன் நைட்டு தண்ணி போட்டு வந்து, என் உடம்பில் மூக்கை தவிர, எல்லா பார்ட்ஸையும் அடிச்சி காயப்படுத்தி வச்சிருக்கான்.
யார்? அது, மூக்கை உடைக்காமல் அடிக்க சொல்லி கொடுத்தது என்று தெரிந்து கொள்ள தான் இன்று மில்லுக்கு வந்தேன்.
நீ தானா அவன். மறுபடியும் அடிச்சி துரத்திக்கொண்டு ரோட்டில் விட்டுவிட்டு வந்தாள்.

எழுதியவர் : (17-Sep-21, 3:27 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
Tanglish : vivasaayin nilai
பார்வை : 128

சிறந்த நகைச்சுவைகள்

மேலே