அடியும் உதையும்

அடியும் உதையும்.

எடியே ! என்
செல்லமே!
அடித்திடுவேன், உதைத்திடுவேன்,
உன்னை நான்
என் மனத்தினிலே!

மன்னித்தே நீயும்,
மறுபடியும் மறுபடியும்,
வந்தே மனத்தினிலே!
மலர்ந்திடுவாய்
மகிழ்வோடு.

படிக்காத பாவி நான்,
பேசிடுவேன ஏசிடுவேன்,
உன்னை நினைத்தே
உருகிடுவேன்,
மறந்திடாதே நீ என்னை,
மறுபடியும் மறுபடியும்,
வந்தே மனத்தினிலே!
மலர வேண்டும்,
மகிழ்வோடு.

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (17-Sep-21, 5:39 pm)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 66

மேலே