பொருளிலா பிரிவினை - வெள்ளொத்தாழிசை

குலத்தில் பிரிவினை! எண்ணப் பிரிவினை!
நலத்தில் குறைகளை ஆக்கிடும் வீணாய்
பலத்தை குறைக்கும் உணர்வாய்

முதலில் பிரிவினை ! மூர்க்கப் பிரிவினை !
பதற்றம் தராத வகையில் பிரித்ததால்
பொதுவாய் இழப்பே உணர்வாய்

எதனால் பிரிவினை ! வந்தது பிரிவினை !
மதியால் மனிதனே ஏற்கா பிரிவால்
சிதைவால் இழப்பே உணர்வாய்.
----- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (20-Sep-21, 7:26 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 30

மேலே