காதல் கற்பு எல்லாம் எங்கே

ஒழுகிசை அகவல் ஓசை உடைய நேரிசை ஆசிரியப்பா

விலைமா தெலாமும் வீதி யிலின்று
நின்றவர் வலைவீ சுவதெத னாலே
கஞ்சிக் கிலையாம் பாரத னாலே
கொலைபபா தகக் கணவ னாலே
கணிகை செய்தொழில் சிறக்க வாழ்ந்தாள்
பிணியிலா வடிகா லன்றே தேர்ந்தார்
இளம்வா லிபர்கள் அன்று மங்கையர்
தோதாய் யாரைத் தேடுவார் துணையும்
சன்னலில் கதவிடுக் கிலுமே காண்பார்
ஆணை யாரை விசாரிப் பளறிய
மார்பு தூக்கி பெருமூச் சேற்றி
இறக்குவள். யாரிடம் அவனை சொல்வளாம்
விளித்திட விளக்க முடியா
நிற்பள் பத்தினிப் படித்தாண் டாளே

பெண்ணொருத் திஸ்கூ டரில்போய்க் கொண்டே
இன்று கணவனை கேட்டாள் போனில்
எங்கம் மாக்கிட் டேநீ போவே
அப்ப உங்கம் மாகிட் டேயார்
போவார் சொல்லு என்றே யேசினள்
அவனும் அப்படி இவளும் இப்படி
இன்று பதிலுக் குப்பதில்
அன்புகற் புப்பா சமெல்லாம் பொய்யே

எழுதியவர் : பழனி ராஜன் (4-Oct-21, 9:09 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 47

மேலே