மாண்புமிகு மக்கள்
நம் நாட்டில் ஒரு பக்கம்
மரக் கன்றுகள் நடும் விழா
மிக விமர்சையுடன்..!!
ஒருபக்கம்
வளர்ச்சி பணியென்று
மரங்களை வெட்டி
வீழ்த்தும் விழா
அதே விமர்சையுடன் ..!!
மொத்தத்தில்
மக்களின் வரிப்பணத்திற்கு
வேட்டு வைக்கும் விழாவை
ராமன் ஆண்டாலும்
இராவணன் ஆண்டாலும்
எனக்கு கவலையில்லை
என்பதை போல்
கைகட்டி சில மனிதர்களும்
கைதட்டி சில மனிதர்களும்
வேடிக்கை பார்க்கின்றார்கள் ...!!
இந்த நிலை மாறப்போவது
மனிதர்களின் கையிலா...??
அல்லது
இது மக்களின் ஆட்சி
என்று சொல்லி ஆட்சி புரியும்
மாண்புமிகு
மனிதர்களின் கையிலா ...??
--கோவை சுபா