யார் நீ
யார் நீ?
சும்மா சும்மா பிதற்றினால்,
பயித்தியம் என்பார்!
கவிதையால் பிதற்றினால்,
உன்னை கவிஞன் என்பார்!
சும்மா சும்மா ஏசினால்,
சுடு மூஞ்சி என்பார்!
கவிதையால் ஏசினால்,
உன்னை ஞானி என்பார்!
சிந்தித்து பாரு!
சிரித்திடுவாய் நீயும்
என்னுடன் சேர்ந்து,
அப்படியே இருக்கட்டும்
உலகம்,
அதுவே வேண்டும்
எனக்கும் உனக்கும்.
ஆக்கம்
சண்டியூர் பாலன்.