இதில் யாரை நம்புவது
யாரை நம்புவது?
கணவன்:
மலர் என்பதா!
"அவளை"
மரணம் என்பதா!
மலராய் இருந்தால்!
" நானும்"
மனிதனாக வாழ்ந்து,
மனைவியாக அவளை
மாற்றி இருப்பேன்.
மரணம் என்றதால்,
நான் மரணித்து
பலகாலம்,
மற்றவர்க்கு மட்டும்
கணவன் மனைவி.
மனைவி:.
மனிதன் என்பதா!
"அவனை"
மிருகம் என்பதா!
மனிதனாய் இருந்தால்!
"நானும்"
சக்தியாக மாறி,
அவன் வாழ்வை
இயக்கி இருப்பேன்.
மிருகம் என்றதால்,
நான் மரணித்து
பலகாலம்,
மற்றவர்க்கு மட்டும்
மனைவி கணவன்.
ஆக்கம்,
சண்டியூர் பாலன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
