வாழ்க்கை நமக்கு தந்த விடுகதை
கேள்விகளால் நிறைந்தது தான்
இந்த உலகம் ...
உலகமே இப்படியிருக்க
நம் வாழ்க்கை மட்டும்
என்ன விதிவிலக்கா ???...
நம்மை சுற்றி ஆயிரம்
கேள்விகள் ...
நமக்குள்ளும் ஆயிரம்
கேள்விகள் ...
அந்த ஆயிரத்தில் பதில் சொல்ல
வேண்டிய கேள்வியையும் ,
பதில் வேண்டிய கேள்வியையும்
கண்டறிந்து களிப்புடன் கடந்து
செல்வதே வாழ்வின் புத்திசாலித்தனம் ...
ஆனால் அத்தனை கேள்விக்கும்
பதில் சொல்லியும் , பதில் தேடியும்
தொலைந்து துயரமாய் முடிவதே
வாழ்வின் மாபெரும் பரிதாபம் ...
"ஆயிரத்தில் ஒன்றை எடுத்தால்
மற்றவை எல்லாம் பூஜ்ஜியமே "
புரிந்தவர்க்கு புரியட்டும் என வாழ்க்கை
நமக்கு தந்த விடுகதை இது ...
இவன்
மகேஸ்வரன் கோவிந்தன் (மகோ)
கோவை-35
+91-98438-12650