மழையும் மனனவியும்

இவையின்றி அமையாது வாழ்வு
அவை தரும் மகிழ்வு பல ...

இவை பொழியும் பொழிவு (சொற்பொழிவு , மழைபொழிவு)
பொலிவு தரும் தெளிவு வரும் உலகில்

இவற்றை மனதிலும் மதகு கொண்டும் தேக்கினால் கலங்கல் கொளும் .

மேலோட்டம் கொண்டு நீரில் அன்னம்
பால் பிரிப்பாற் போல் பிரித்திட வாழ்வு .

அன்றில் அதையே தங்க விட்டால் தந்திடும் கலங்கலும் கலக்கமும்

மனைவியும் மழையும் ஒன்றே...
பொழிகையில் சங்கடம் தரும்

பொழிந்தபின் மண் கொளும் வெள்ளம் ... உள்ளம் கொளும் வெல்லம் எனும் சுவை .

வாழ்க வையகம் வான்சிறப்பு எனும் மழையுடனும் ...
இல்சிறப்பு எனும் மனையாள் கொளும் சொல்லாடலுடனும்

எழுதியவர் : பாளை பாண்டி (15-Nov-21, 6:43 am)
சேர்த்தது : பாளை பாண்டி
பார்வை : 286

மேலே