கை நிறையக் காசு

கை நிறையக் காசு.

கை நிறையக்
காசு உண்டு,
கணவன் மனைவி
வாழ்வு இல்ல!

திரைகடல் ஓடி
திரவியம் தேடி,
என் வாழ்வில்
அரைவாசி
வெளி நாட்டில்.

அவள் வாழ்வோ!
இப்போ,
பேரன் பேர்த்திகள்.

எஞ்சியது தான்
எனக்கென்றால்!
எதற்காக இறைவன்
எங்களை சேர்த்து
வைத்தான்?

ஆக்கம்
சண்டியூர் பாலன்.

எழுதியவர் : சண்டியூர் பாலன் (23-Dec-21, 8:09 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
Tanglish : kai NIRAIYAK kaasu
பார்வை : 60

மேலே