அக்கா

உன் விரலுக்குள்
என் கையை பிடித்து கொண்டாய்..!!

தாய் இல்லாத
நேரங்களில் எனக்கு
தாயாக மாறி தாலாட்டு
பாடி உறங்க வைத்தாய்..!!

உன் பாத சுவடுகளை
கண்டே நடக்க
ஆரம்பித்தவன் நான்..!!

உன் பேச்சை கேக்காத
போது அடித்தாய்
தாய் தந்தை அடிக்க
வந்தால் என் மீது படாமல்
உன்மீது வாங்கி கொண்டாய்..!!

எப்பவும் எங்கேயும்
என்னை விட்டு
கொடுக்காதவள்

இன்று திருமணம் செய்து
என்னை பிரிந்து செல்கிறாய்..!!

அக்கா என் அன்பின்
முழு உருவம் நீயே
என் மறு தாயே..!!

எழுதியவர் : (11-Jan-22, 10:23 am)
Tanglish : akkaa
பார்வை : 219

மேலே