பேருந்தில் பூத்த பூவே

வறண்ட மேகம் இங்கே பூக்கின்றதே
உன் சுவாசம் தீண்டியதால்..

புன்னகை தூரல்கள் வசந்தமாக
மலர்கிறது நின் முகம் கண்டதால்..

கதிரவனின் தாக்கம் கண்ட நிலையிலும்
என் அருகினில் உந்தன் மூச்சுக்காற்று
தென்றலாக படர்கின்றதே..

இப்படியே இந்த பயணம் தொடராதோ...
வாழ்வின் எல்லை வரை...

எழுதியவர் : பூபாலன் மு (3-Feb-22, 6:06 pm)
சேர்த்தது : பூபாலன் மு
பார்வை : 60

மேலே