ஒன்றான பின்பே

ஒன்றான பின்பே ...
**************
அசைந்தாடும் கொடி யாவும் அழகாக வரவேற்கும்!

இசைபாடும் குயில்கூட இனிதாகக் கவிபாடும்!

தசையாடும் உறவெல்லாம் தமக்கென்று உனைத்தேடும்

திசைமாறிப் போனாலும் திரும்பினால் பகைஓடும் !

ஊனோடும் உயிரோடும் ஒன்றான பின்னாலே

ஊடலும் மோதலும் உதவுமோ இன்னாளில் !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான் (4-Feb-22, 11:09 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 41

மேலே