ஒன்றான பின்பே
ஒன்றான பின்பே ...
**************
அசைந்தாடும் கொடி யாவும் அழகாக வரவேற்கும்!
இசைபாடும் குயில்கூட இனிதாகக் கவிபாடும்!
தசையாடும் உறவெல்லாம் தமக்கென்று உனைத்தேடும்
திசைமாறிப் போனாலும் திரும்பினால் பகைஓடும் !
ஊனோடும் உயிரோடும் ஒன்றான பின்னாலே
ஊடலும் மோதலும் உதவுமோ இன்னாளில் !!
-யாதுமறியான்.