👸மங்கையவளுக்கு மகுடம்👑சூட்ட வேண்டும்👸
துயில் கலைந்திட்ட நேரத்திலோ
உறங்காமல் உழைத்து
உடல் வலியும் மனவலியும் மறந்து
சிரித்துக்கொண்டே
குடும்பத்திற்க்காக சிந்திப்பவள்
சினம் என்ற ஒன்று இருந்தாலும்
சிலை அழகைபோல சிற்பமாய் நின்று
காப்பவள்
துயரம் கண்டு துவண்டுவிடாமல்
துன்பங்களை இன்பங்களாய்
மாற்றும் வலிமை படைத்தவள்
இவள் உலகை கண்டு இந்த
ஆண் இனமே வந்து மங்கையவளுக்கு மகுடம் சூட்ட வேண்டும்.....👸👸👑👑
உங்கள்
😍தமிழ் அழகினி✍️