செப்ப நெறிதூரா வாறு மூன்று – திரிகடுகம் 83
இன்னிசை வெண்பா
உப்பின் பெருங்குப்பை நீர்படியின் இல்லாகும்
நட்பின் கொழுமுளை பொய்வழங்கின் இல்லாகும்
செப்பம் உடையார் மழையனையர் இம்மூன்றும்
செப்ப நெறிதூரா வாறு 83
– திரிகடுகம்
பொருளுரை:
உப்பினது பெரிய குவியல் தன்னில் நீர் படிந்தால் இல்லாமற் போகும்;
நட்பினது செழித்த முளையானது பொய்யாகிய நெருப்பைப் பெய்தால் அழிந்து போகும்;
நடுவுநிலைமையுடையார் மழை போல எல்லார்க்கும் ஒப்ப உபகரிப்பார்;
நீர் படியாமையும் பொய் வழங்காமையும் மழையை ஒத்தலும் ஆகிய மூன்றும் நல்வழியை தூராமைக்குக் (தூர்ந்து போகாமலிருக்கச் செய்யும்) காரணமாகிய சாதனங்களாகும்.
கருத்துரை:
உப்பின் குவியல் நீர் படியாமையும், நட்பினர் பொய் வழங்காமையும், மழையனையார் செப்பமுடைமையும் நல்வழியைக் கெடுக்கா முறைகள் எனப்படுகிறது.
படிதல் - தோய்தல், பொருந்தல்,