எத்தனை வித்தியாசம்

திருமணமான பின்பும் குழந்தையாக
போக்குகாட்டியவள்
ஒரு குழந்தைக்கு தாயானதும்
எப்படி
எனக்கும் சேர்த்து தாயாய் மாறிப் போனாள்

அம்மா வீட்டை சொர்க்கமென்றவள்
அதனை மறந்து என் வீட்டில்
சொர்க்கத்தை உருவாக்கியது எப்படி ..

5 ஆண்டுகள் அக்கவுன்ட்ஸ் படித்த
என்னையும் விஞ்சி நிற்கிறது
அவளின்
வீட்டுவரவு செலவு கணக்கு நுணுக்கங்கள்

வீட்டினை நிர்வகிப்பதில்
என்னை நீ முந்தியதில்
எனக்கு மகிழ்ச்சியே...

என் பெற்றோரின் மீதான
உனது மரியாதை
உன் மதிப்பினை
எனக்குள் தூக்கி நிறுத்துகிறது...


நீ நீயாய் இருந்ததற்கும்
நீ தாயாய் இருப்பதற்கும்
எத்தனை வித்தியாசம்...

அன்புடன் ஆர்கே..

எழுதியவர் : kaviraj (16-Apr-22, 8:46 pm)
பார்வை : 73

சிறந்த கவிதைகள்

மேலே