வீதியோரம் அன்று

அருகே சாய்ந்திருந்த
சுருக்குப் பையினுள்,
சீவல் பாக்கும்,
சுண்ணாம்புக் குப்பியும்,
ஐந்தாறு வெற்றிலைகளும்...

பின்கொசுவம் பிடித்த,
கந்தல் சேலையில்
வீதியோரம்
வியர்வையில்
அமர்ந்து இருந்தாள்
சிவப்பு அதரக்காரி....

விரிப்பின் மேல்
பரப்பிய கறிகாய்கள்
மெல்ல மெல்ல
வாட்டம் கொள்ள...
விற்றுத் தீராதோ?!!!

என்ற ஏக்கத்தில்,
தோளில் சுருக்கமும்,
கண்களில் வெறுமையும்,
வாழ்வில் வறுமையும்
கொண்ட அக்கிழவி!

- காவ்யா.

எழுதியவர் : காவ்யா கோவிந்தராஜ் (5-May-22, 10:21 pm)
சேர்த்தது : காவ்யா gk
பார்வை : 85

மேலே