மருளூமத்தை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

சீதசுரம் நீரேற்றஞ் சில்விஷங்கள் மந்தத்தோ
டூதையிவை யெல்லாம் ஒழியுங்காண் - போத
இருளூருங் கூந்தல் எழின்மாதே காண
மருளூமத் தைக்கறிந்து வை

- பதார்த்த குண சிந்தாமணி

இது குளிர்சுரம், நீரேற்றம், சிலவகை விடங்கள், அக்கினி மந்தம், வாத தோடம் இவற்றைப் போக்கும்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-May-22, 9:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே