கனவின் சுவடுகள் கலையா நினைவுகளுடன்

கனவின் கதவைத் திறந்து
சிறகு இல்லா
ஒருதேவதை போல்
கண்முன் தோன்றுகிறாய்
நிலவில் நனையும் இரவில்
கைகோர்த்து அழைத்துச் சென்று
காதல் கீதம் பாடுகிறாய்
கனவின் சுவடுகள் கலையா
நினைவுகளுடன்
மாலைதோறும் உனக்காகக்
காத்திருக்கிறேன் !!!

எழுதியவர் : கவின் சாரலன் (2-Jun-22, 4:03 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 97

மேலே