கோவை நகர்க்குமரியோ

நூலை எழில்மிகு வண்ணமிகு ஆடையாய்
சேலை தனைநெய்து நித்தம் விதவிதமாய்
பாவை அணிந்து நடக்கிறாள் பாரிவள்
கோவை நகர்க்குமரி யோ

---இரு விகற்ப இன்னிசை வெண்பா

நூலை எழில்மிகு வண்ணமிகு ஆடையாய்
சேலை தனைநெய்து நித்தமும் --மாலைப்பூம்
பாவை அணிந்து நடக்கிறாள் பாரிவள்
கோவை நகர்க்குமரி யோ


--இரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jun-22, 10:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 48

மேலே