கோலம்
"கேட்க பேச்சுக்கள்
இல்லாமல்
காதுகள் ஏங்கும் ,
பார்க்க காட்சிகள்
இல்லாமல்
கண்கள் தூங்கும்,
பேச விஷயங்கள்
இல்லாமல்
உதடுகள் காயும்,
அணைக்க உறவுகள்
இல்லாமல்
கைகள் ஓயும்,
நடக்க பயணங்கள்
இல்லாமல்
கால்கள் தேயும்,
இது தான்
பெரும்பாலும்
முதுமையின்
கோலம்."👵🧓