மோனை எதுகையில் யாப்பெழுதி

மோனை எதுகையில் யாப்பெழுதி என்னபயன்
பானையில் அரிசியின்றி சோறு வருமா
வானைப் பார்த்தா கவிதை மதுரை
மீனா விழியசைவில் பொழிந்திடும் தமிழ்ப்பொதிகை

----இது கலிவிருத்தம்


மோனை எதுகையில் யாப்பெழுதி என்னபயன்
பானை யிலரிசி இன்றிசோறு வந்திடுமா
வானத்தை பார்த்தா கவிதை மதுரைத்தாய்
மீனாபார்க் கின்பொழிந்தி டும்

----ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

மோனை எதுகையில் யாப்பெழுதி என்னபயன்
பானை யிலரிசியின் றிச்சோறா --மானேசொல்
வானத்தை பார்த்தா கவிதை மதுரைத்தாய்
மீனாபார்க் கின்பொழிந்தி டும்

---ஒரு விகற்ப நேரிசை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (9-Jul-22, 10:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே