பொலிவுடன் நடக்கும் கலிவிருத்தத் தேவதை

விளக்கொளி போல்முகம் பளிச்சென்று தோன்றுதடி
விளங்கனிச் சீரிலா வெண்பாபோல் சிரிக்கிறாயடி
விளைந்தநல் நெற்கதிர்போல் தலைகுனிந்து நடக்கிறாயடி
விளக்கேற்றும் வேளையில் தேவதையாய் வருகிறாய்நீ

கவிக்குறிப்பு :

விளங்கனிச் சீரிலா ---நேர் நிரை நிரை விளங்கனி
கனிச் சீரை வெண்பா ஏற்காது விளங்கனிச் சீரிலா தூய
வெண்பாபோல் சிரிக்கிறாள் என்று பொருள்

நான்கு சீர் நான்கு அடி ஒரே எதுகை விள + வர்க்க எதுகை விளை
அமைந்த பாவினம்
சொல் பிளவு படாத விளச் சீர் காய்ச்சீர் கனிச்சீர் பெற்று வந்து
பொலிவுடன் நடக்கும் கலிவிருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jul-22, 4:41 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 31

மேலே