பேரரத்தை தும்ராட்டகம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா
(’த்’ ‘ற்’ வல்லின எதுகை)

அரத்தை கபத்தை யறுக்குங்கால் ஓட்டுஞ்
சிரத்திலுறும் ஈளையைச்சி தைக்கும் - இரைத்துவரும்
பித்ததோ ஷத்தைப் பிறவலிப்பை மாற்றிவிடும்
உற்றசர்வ வல்விஷம்போக் கும்

- பதார்த்த குண சிந்தாமணி

நேரிசை வெண்பா
(’ந்’ ‘ன்’ மெல்லின எதுகை)

சந்நி யுபட்சிரணஞ் சார்ந்தசீ தச்சுரம்போம்
வன்ன மிகுந்து வளருங்காண் - கன்னியர்கள்
வாதவிடாய்க் காகு(ம்)வலி வாதக் கடுப்பகலும்
பேதமிலை பேரரத்தை பேணு

- பதார்த்த குண சிந்தாமணி

இது வாத நோய், பின்னிசிவு, வலிப்பு, பித்த தோடம், சன்னி, பித்தகபம், நடுக்கல்சுரம், புண், தலை நீரேற்றம், நீர்விடம், சீதசுரம், பெண்களின் ருதுதோடம், வாதக்கடுப்பு இவற்றை நீக்கி உடல் பொலிவை உண்டாக்கும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Jul-22, 8:07 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 15

மேலே