ஈசன் பாரதியார் பாடல்

ஈசனைத் தொழ ஏற்படும் நன்மை


சோர்வுகள் போகும் -- பொய்ச்
சுகத்தினை தள்ளி சுகம்பெற லாகும் நற்
பார்வைகள் தோன்றும் -- மிடிப்
பாம்பு கடித்த விஷமகன் றேநல்ல
சேர்வைகள் சேரும் --. பல
செல்வங்கள் வந்து மகிழ்ச்சி விளைந்திடும்
தீர்வைகள் தீரும் --. பிணி
தீரும் பலபல இன்பங்கள் சேர்த்திடும்


கல்வி வளரும் -- பல
காரியங் கையுறும் வீரிய மோங்கிடும்
அல்ல லொழியும் --. நல்ல
ஆண்மை யுண்டாகும் அறிவு தெளிந்திடும்
சொல்லுவா தெல்லாம் -- மறைச்
சொல்லினைப் போல பயனுள தாகும் மெய்
வல்லமை தோன்றும் -- தெய்வ
வாழ்க்கையுற் றேயிங்கு வாழ்ந்திட லாம் உண்மை

எழுதியவர் : மகா கவி பாரதி (19-Aug-22, 8:08 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே