கோரோசனை - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நீரிழிவு, மேகசுரம் நீங்காக் கனல்வேகம்
கூரியவுன் மாந்தம் குழந்தைகள்நோய் - பாரகபம்
வீறும் மசூரியும்போம் வேதந் தனிலிரண்டாய்க்
கூறுங்கோ ரோசனை கட்கு

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் நீரிழிவு, மேகசுரம், உடல் அனல், உள்மாந்தம், கண மாந்தம், சிலேட்டுமம், மசூரிப் புண்கள் இவை நீங்கும்; இது மான் வயிற்றிலும், பசுவின் வயிற்றிலும் பிறப்பதாம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (3-Sep-22, 7:37 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

மேலே