கொடுத்துண்டு வாழ்வதே இல்வாழ்க்கை என்னும் இயல்பு – அறநெறிச்சாரம் 165

நேரிசை வெண்பா

பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்றாரம்
நிச்சலும் நோக்காது பொய்யொரீஇ - நிச்சலுங்
கொல்லாமை காத்துக் கொடுத்துண்டு வாழ்வதே
இல்வாழ்க்கை என்னும் இயல்பு. 165

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

இரந்தார்க்கும் துறந்தார்க்கும் வேண்டுவனவற்றை ஈந்து அயலான் மனைவியை எக்காலத்திலும் விரும்பாது, பொய் பேசாது, கொலைத்தொழிலை எஞ்ஞான்றும் செய்யாது, விருந்தினரை உண்பித்துத் தாமும் உண்டு வாழ்தலே இல்வாழ்க்கைக்குரிய இயல்பு என்று நூல்கள் கூறும்.

குறிப்பு:

பிச்சை - இரப்போர்க்கிடுவது, ஐயம் - அறவோர்க்கிடுவது. நிச்சல் - நித்தல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Sep-22, 4:36 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே