கொடுத்துண்டு வாழ்வதே இல்வாழ்க்கை என்னும் இயல்பு – அறநெறிச்சாரம் 165
நேரிசை வெண்பா
பிச்சையும் ஐயமும் இட்டுப் பிறன்றாரம்
நிச்சலும் நோக்காது பொய்யொரீஇ - நிச்சலுங்
கொல்லாமை காத்துக் கொடுத்துண்டு வாழ்வதே
இல்வாழ்க்கை என்னும் இயல்பு. 165
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
இரந்தார்க்கும் துறந்தார்க்கும் வேண்டுவனவற்றை ஈந்து அயலான் மனைவியை எக்காலத்திலும் விரும்பாது, பொய் பேசாது, கொலைத்தொழிலை எஞ்ஞான்றும் செய்யாது, விருந்தினரை உண்பித்துத் தாமும் உண்டு வாழ்தலே இல்வாழ்க்கைக்குரிய இயல்பு என்று நூல்கள் கூறும்.
குறிப்பு:
பிச்சை - இரப்போர்க்கிடுவது, ஐயம் - அறவோர்க்கிடுவது. நிச்சல் - நித்தல்