பார்க்குமுன் கருமை விழியினில் காதல்

வீதியில் பறந்து செல்லும் காக்கைச் சிறகினிலே கருமை
பாதி கவிந்து பார்க்குமுன் கருமை விழியினில் காதல்
சோதி யாய்ஒளிரும் சுட்டுச்சுடர் விழியே காதல் கண்ணம்மா
ஆதியில் வந்தகவி பாரதியும் உன்னைப் போற்றிப் புகழ்ந்திடுவான்


-----இந்த அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம் பாரதியின் கவிதைகளின்
சொல்லாடல் கொண்டு புனையப்பட்டிருப்பதை உங்களில் பலர் அறிவீர்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (11-Sep-22, 11:34 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

புதிய படைப்புகள்

மேலே