தும்பச்சாரம் - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

ஈளை யுடனே இரைப்பு வலிவாதம்
ஆளைவிடாக் குன்மநோய் ஆயதும்போம் - வேளையிமைப்
போதி(ல்)வெல்லும் வேழப் புருவச் சிலைமயிலே
கோதி(ல்)தும்ப சாரத்தைக் கூறு

- பதார்த்த குண சிந்தாமணி

இதனால் ஈளை, (கோழை) இரைப்பு, வாயுவலி, திரிதோட குன்மம் இவை நீங்கும் .

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (12-Sep-22, 11:34 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே