கல்லறை
வந்தாரை
ஜாதி மத பேதமின்றி
வரவேற்று
கவலைகளின்றி
அமைதியாக
உறங்க வைக்குமிடம்
"கல்லறை"....!!
வாழ்க்கை பயணத்தில்
வரவேற்போர் யாரென்றும்
வழியனுப்பி வைத்தோர்
யாரென்றும் நீ அறிவாய்
ஆனா...
"கல்லறை" பயணத்தில்
இவையாவும் நீ அறியாய்
மனிதா உந்தன் பூதஉடல்
"கல்லறை" நோக்கி
பயணம் செய்யும் போதும்
சொந்த பந்தங்கள் நடுவே
"சில்லறை" சச்சரவுகள்
சில சிலம்பாட்டம் போடும்
அவையாவும் உந்தன்
சிந்தனைக்கு தெரியாது...!!
எந்த கவலையில்லாமல்
"கல்லறை" யில்
உந்தன் உறக்கம்...!!
--கோவை சுபா