ஒற்றை
ஒற்றைச் சொல்லுக்குள்
உம் பெருமைகளை
அடக்கிட இயலாது
என்னால்...
ஒற்றைச் செயலால்
உணர்த்திட முடியாது
உம் மீதான என் பாசத்தை...
ஒற்றைப் பார்வையில்
உம் மீதான
என் ஏக்கங்களை
எடுத்தியம்பிட
இயலாது என்னால்...
ஒற்றை கண்ணீர்த் துளியால்
உம் இழப்பின்
துயரத்தை ஆற்றிட
முடியாது என்னால்...
ஒற்றை வரிக்குள்
உம் மீதான
என் உரிமையை
வரித்திட முடியாது
என்னால்...
இவள்
எண்ணங்களின் எழுத்தழகி
அறூபா அஹ்லா