அம்மாவின் புடவை

இந்த உடைக்கும் எனக்குமான தொடர்பு💛

குளிருக்கு இதமாய் என்னதான் கம்பளி போர்வையை போர்த்தி கொண்டாலும் அம்மாவின் முந்தானையை போர்த்தி கொள்வதற்கு ஈடு எதுவும் இருக்காது!!!!
அம்மாவின் முந்தானை சரிகையை கெட்டியமாக பிடித்து கொண்டு வீதியில் உலா வந்த காலம் அது...இன்றும் நினைவிருக்கிறது!!! குளுறிய போது, மழையில் நினைந்த போது, கண்ணில் பட்ட தூசியை அம்மாவின் மூச்சு காற்றால் புடவையில் ஊதி ஒத்தடம் கொடுத்த போது என வாழ்வில் அத்தனைக்கும் துணையாய் அம்மாவின் புடவை அங்கம்!!! தொட்டிலில் தொடங்கி இன்று வரை அம்மாவின் புடவை என்றால் எனக்கு அதிக பரிட்சயம் !!!
அவ்வாறு தொடர்பு கொண்ட புடவை ஒன்றில் அம்மா ஆசையுடன் தன் கற்பனைக்கே தைத்து கொடுத்த உடைதான் இது 😊

- கௌசல்யா சேகர்

எழுதியவர் : Kowsalya sekar (31-Oct-22, 8:26 pm)
சேர்த்தது : கௌசல்யா சேகர்
Tanglish : ammaavin pudavai
பார்வை : 452

மேலே