சிவம்
உடல்கள்...
அதனோடு கூடிய
உணர்வுகள்...,
படைக்கப்பட்ட
மனங்கள்...
அச்சாணியாய்
கூடவரும்
அகங்காரம்...
செல்லரித்துப்
போகும்
இவற்றுடன்
சொல்லரித்து
மௌனமான
பாஷையில்..
ரசம்..ரத்தம்
தசை...மேதஸ்
அஸ்தி..மஜ்ஜை
சுக்கிலம்
ஊடுருவி
உள்ளுறையும்
இறையே...
உனை நோக்கிய
பயணங்களில்
உடனிரு..,
கரைசேர.!!