சிறு தீண்டல்

எனக்கெங்கே என்னும் உரிமைக்குரல்
உறவுகளை உயிர்த்தெழ செய்யும்.
கருகும் பயிரையும்
காய்க்க செய்யும்
அடித்து அணைக்கும் மழையாய் நீ.
அன்பு ஒன்றே உறவாகும்.
உரைக்கா செய்தி கொண்டு
வெட்டி எறியும் மாமனிதர்களை விட
ஏன் என்னை விட்டாய் என
கண்டிக்கும் சிறு தீண்டல்
வாழையடி வாழையாக வளமாக்கும்
நம் சொந்தங்களை……

எழுதியவர் : நிலவன் (24-Nov-22, 9:41 am)
சேர்த்தது : நிலவன்
Tanglish : siru theendal
பார்வை : 142

மேலே