காத்திருக்கேனடி குயிலே

அக்கரைச் சீமையரை/
ஆத்தோரம் நான் கண்டவரை/
ஆகாய வழி வந்து சென்றவரை/
ஆத்தா வழி பிறந்த உறவினரை /

காத்திருக்கேனடி குயிலே /
இரு இமை பூத்திருக்கேனடி குயிலே/
தூக்கம் துறந்திருக்கேனடி குயிலே/
இதயத்திலே ஏக்கம் தேக்கமடி குயிலே/

வந்தவர் கருமை வண்ணக் கண்ணனடி /
மனதைக் கொள்ளையிட்டது உண்மையடி /
நெஞ்சத்தில் மஞ்சம் போட்டானடி /
பெண்மைக்குள் கலக்கம் விதைத்தானடி/

பல வார்த்தை உரைத்து /
பாவி ஆவியை ஆசையிலே புதைத்து /
அடுத்த நொடியே சென்றானடி /
கொடுத்த மனசும் எடுத்த மனசும்/
துடிப்பதை நீயும் கேளடி குயிலே /

நித்திரைக்கு எதிரியானேனடி /
எக்கரை கடந்து நான் போவேனடி /
சக்கரை போல் என் வாழ்வு இனித்திடவே /
எங்கே வாழ்வின் சொர்க்கறையென தேடிடுகின்றேவேனடி குயிலே /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (3-Dec-22, 7:35 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 51

மேலே