121 எப்பணி செய்தாலும் இல்லாள் கணவன் நினைப்பொழியாள் - கணவன் மனைவியர் இயல்பு 13
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
வினைப்பகைநீர் பெரியரில்வாழ் வினிற்கலந்து நின்றாலும்
..வேத நாதன்
தனைப்பரவி நினைத்தலென்றும் ஒழியார்போல் கற்பி(ன்)மிக்க
..தைய லார்தம்
மனைப்பணிகள் செய்தாலுந் துயின்றாலுங் கனவினுந்தம்
..மணாளர் மாட்டு
நினைப்பொழியார் கணவருடன் அவர்மனமொன் றாய்க்கலந்து
..நிற்கு மாதோ. 13
- கணவன் மனைவியர் இயல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
குற்றமற்ற பெரியோர் மனைவாழ்வினில் கலந்திருந்தாலும் கடவுளைத் தொழுது அவனை மறவாமல் அவன் நினைவாகவே இருப்பார்கள்.
”அதுபோன்று கற்புடைய பெண்கள், தங்கள் வீட்டுப் பணிகளைச் செய்தாலும், உறங்கினாலும், கனவிலும் தம் கணவன் நினைவை மறவாது இருப்பார்கள். கணவர் மனமும், மனைவியர் மனமும் ஒன்றாகவே கலந்து இருக்கும்” என்று கற்புடைய மனைவி எக்காரியம் செய்தாலும், தன் கணவனின் நினைவை மறவாது இருக்க வேண்டும் என்று இவ்வாசிரியர் சொல்கிறார்.
வேதநாதன் - கடவுள். வேதம் - கடவுள் நூல். தையலார் - பெண்கள்.