பேச்சும் மூச்சும் யாப்பு வைப்பதோ ஆப்பு

நேரிசை வெண்பா


யாப்பினில் யாத்திடார் யாம்கேட்டும் யாதொன்றும்
பாப்பாவா பாயாப்பில் பாரென்பர் -- தோப்பார்காண்
கூப்பாட்டில் ஓடக் குழவியோ கூறுயாம்
தாப்பாளைப் போட்டுநீத் தள்ளு

யாத்திடார். == எழுதித் தொடுப்பது
பாப்பாவா= பாட்டு பாட்டென பாக்களாய்
பாயாப்பில் == பாட்டுக்களை யாப்பில்
கூப்பாட்டில் = அழைப்பு ஆணை
குழவி = குழந்தையோ

""ப் " அடிதோரும் எதுகையாக
ஒன்று மூன்று சீர்களில் தவறாத மோனைகள் பார்க்கவும்

எழுதியவர் : பழனி ராஜன் (13-Jan-23, 12:14 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 34

மேலே