பொதிகைத் தமிழிற் பொதிந்த சொல்லெடுத்து - கலிவிருத்தம்
கலிவிருத்தம்
(மா மா மா காய்)
(1, 3 சீர்களில் மோனை)
பொதிகைத் தமிழிற் பொதிந்த சொல்லெடுத்துப்
புதுமை நிலவிற் பொழியு மெழிலெடுத்துக்
கதியா யவைகள் காட்டுஞ் சுவையதனால்
நிதியாய்க் கவிதை நினைந்து பாடுவனே!
– வ.க.கன்னியப்பன்
மரபுக் கவிதைக்கு அழகு தருவது நல்ல கருத்தும், தகுந்த இலக்கண வழிமுறையும், சீர் ஒழுங்கும், தகுந்த மோனையும், எதுகையுமே!